Top Ad unit 728 × 90

கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியின் கழுத்தை அறுத்து மலசல கூடத்தில் வைத்த கணவன் !

கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியின் கழுத்தை அறுத்து மலசல கூடத்தில் வைத்த கணவன் கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியின் கழுத்தை அறுத்து மலசல கூடத்தில் வைத்த கணவன் பிரித்தானிய நாட்டில் துரோகம் செய்த மனைவியின் தலையை துண்டாக்கி கழிவறையில் கரைத்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத


 கிழக்கு லண்டனில் உள்ள Hoxton என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் Dempsey Nibbs(69) மற்றும் Judith Nibbs(60) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். டெம்ப்ஸியை திருமணம் செய்வதற்கு முன்னதாக ஜுடித் திருமணமாகி 3 பெண் குழந்தைகளுடன் விவாகரத்து பெற்று டெம்ப்ஸியை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மொத்தம் 5 பிள்ளைகள் இருக்கின்றனர். திருமணம் ஆகி 30 வருடங்கள் ஆன நிலையிலும் இவர்களது வாழ்க்கை பல பிரச்சனைகளை எதிர்க்கொண்டுள்ளது.

 ’தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறொரு ஆணுடன் தன் மனைவி கள்ள உறவு வைத்திருக்கிறார்’ என டெம்ப்ஸி சந்தேகம் அடைந்துள்ளார். இதனை ஒரு நாள் நேரடியாக கூறி மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, ‘ஆமாம், எனக்கு வேறொரு நபருன் தொடர்பு இருக்கிறது. அவருடன் 8 முறை உடலுறவு கொண்டுள்ளேன். உங்களால் என்ன செய்ய முடியும்?” எனக்கூறி விட்டு சென்றுள்ளார். மனைவியின் வார்த்தைகளை கேட்டு டெம்ப்ஸி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

 மறுநாள் ஜுடித் அலுவலகம் முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, ‘நாளை நான் அலுவலகம் வரவில்லை என்றால், என்னை என் கணவர் கொலை செய்துவிட்டதாக தீர்மானித்துக்கொள்ளுங்கள்’ என தன்னுடைய சக ஊழியரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு திரும்பிய மனைவியை பார்த்த டெம்ப்ஸிக்கு ஆத்திரம் எல்லையை மீறி சென்றுள்ளது. உடனே இருவருக்கும் பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு உச்சக்கட்டத்தை எட்டியபோது, டெம்ப்ஸி தனது மனைவியை அடித்து வீழ்த்தியதில் அவர் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

 கீழே விழுந்த மனைவியை இழுத்துக்கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர், கத்தியை எடுத்து வந்த அவர் மனைவியின் தலையை வெட்டி துண்டாக்கியுள்ளார். ஆனால், அப்போதும் ஆத்திரம் அடங்காத டெம்ப்ஸி துண்டாக கிடந்த தலையை இரும்பு கம்பி கொண்டு அடித்து தூள் தூளாக நொறுக்கியுள்ளார். பின்னர், நொறுங்கி கிடந்த தலை பாகங்களை சேகரித்த அவர் அவற்றை கழிவறை கொட்டி தண்ணீர் பாய்ச்சி அப்புறப்படுத்தியுள்ளார். தனது வாழ்க்கையே துயரத்தில் முடிந்துள்ளதாக எண்ணிய அவர் உடனடியாக பொலிசாருக்கு தற்கொலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘என்னுடைய வீட்டில் இரண்டு சடலங்கள் கிடக்கின்றன. உடனடியாக வாருங்கள்’ என எழுதிவிட்டு தன்னுடைய துப்பாக்கி மற்றும் கத்தியை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றுள்ளார்.

 இந்நிலையில், வீட்டில் அலறல் சத்தம் கேட்டதால் அருகில் குடியிருந்தவர்கள் ஏற்கனவே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். டெம்ப்ஸி குளியலறையில் நுழைந்து தன்னை தானே குத்திக்கொண்டு இருந்த அந்த நேரத்தில் பொலிசார் கதவை உடைத்துக்கொண்டு வந்து அவரிடமிருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை பறிமுதல் செய்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் திகதி நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக டெம்ப்ஸி நேற்று தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக நடைபெற்ற விசாரணையில், 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் டெம்ப்ஸியின் மனைவியான ஜுடித் ‘ஸ்கைப்’ மூலம் பல ஆண்களுடன் ஆபாசமாக உரையாடி இருந்ததையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். டெம்ப்ஸி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால், அவர் மீதான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியின் கழுத்தை அறுத்து மலசல கூடத்தில் வைத்த கணவன் ! Reviewed by Unknown on 8:27:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.