Top Ad unit 728 × 90

சிறுவனுடன் உடலுறவு கொண்ட தாயார்: குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு

பிரித்தானிய நாட்டில் 14 வயது சிறுவனுடன் தாயார் ஒருவர் உடலுறவு கொண்ட வழக்கில் அவர் குற்றமற்றவர் எனக்கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான ஏஞ்சலா கட்(37) என்பவர் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

உறவினர் வீட்டில் 14 வயது சிறுவன் உள்பட பலர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் மது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதால் ஏஞ்சலாவும் அந்த 14 வயது சிறுவனும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர்.

பின்னர், நிதானத்தில் இல்லாத இருவம் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் உடலுறவில் ஈடுப்பட்டுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு அறைக்கு சென்று பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

14 வயது சிறுவனுடன் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான ஏஞ்சலா தகாத முறையில் உடலுறவில் ஈடுப்பட்டதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, சுயநினைவுடன் இல்லாமல் இருந்தாலும் கூட சிறுவனுடன் உல்லாசத்தில் ஈடுப்பட்டது தவறு தான் என ஏஞ்சலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், இதற்கு முன்னதாக ஏஞ்சலா எந்த குற்றத்திலும் ஈடுப்படாதவர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

சம்பவ தினத்தன்று இருவரும் அளவுக்கு அதிகமான மதுபோதையில் என்ன செய்கிறோம் என்பதை கூட தெரியாமல் தவறு செய்துள்ளதும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏஞ்சலாவிற்கு சிறை தண்டனை விதிப்பது சரியாகாது எனக் கூறிய நீதிபதி அவருக்கு 1,000 பவுண்ட் அபராதம் விதித்து விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.
சிறுவனுடன் உடலுறவு கொண்ட தாயார்: குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு Reviewed by Unknown on 6:20:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.