Top Ad unit 728 × 90

விடுதலைப்புலிப் போராளிகளை தலை வணங்குகிறேன்:சொன்னது யார் தெரியுமா?

விடுதலைப் புலிகளின் போராளிகளை தாம் வணங்குவதாக எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான சோபா சக்தி தெரிவித்துள்ளார்.

எனினும், புலிகளின் தலைமை மீதும் அவர்களின் அரசியல் வழிமுறைகள் மீது வருத்தம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு வெளியான "தீபன்" எனும் பிரெஞ்சு மொழி நாடகத் திரைப்படத்தில் எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான சோபா சக்தி, தமிழக மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் 2015 Cannes திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) விருது வென்றுள்ளது.

இலங்கையில் இருந்து பாரிஸ் சென்ற தமிழ் அகதிகள் மூவரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படத்தின் கதை.

குறித்த திரைப்படம் சர்வதேச ஊடகம் ஒன்றில் எதிர்வரும் 21ஆம் திகதி ஒளிபரப்பப்படவுள்ள நிலையில், அந்த ஊடகத்துக்கு வழங்கியுள்ள விஷேட செவ்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தாம் அனுபவித்த யுத்த கொடுமை, விடுதலைப் புலிகளின் தலைமை, இலங்கை அரசாங்கம், இலக்கியம், சிறைக் கொடுமை உள்ளிட்ட விடயங்களை அவர் தனது செவ்வியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
விடுதலைப்புலிப் போராளிகளை தலை வணங்குகிறேன்:சொன்னது யார் தெரியுமா? Reviewed by Unknown on 5:01:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.