Top Ad unit 728 × 90

பருத்தித்துறையில் 60 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா!பொலிஸ் சுற்றிவளைப்பால் மீட்ப்பு.

யாழ். செம்மணி மயானத்தை நெருங்கிய பகுதி மற்றும் பருத்தித்துறை குடத்தனை மயானம் ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 60 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய விஷேட போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் யாழ். செம்மணி சுடலை பகுதியிலும் வெளிமாவட்டம் ஒன்றுக்கு கடத்தி செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் ஒவ்வொன்றும் தலா இரண்டு கிலோ நிறையுடையதாக காணப்பட்டதாகவும், இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 30இலட்சம் ரூபாய் எனவும் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ் லோஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து யாழ்.பருத்தித்துறை பகுதியிலும் இது போன்றே கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை குடத்தனை வடக்கு சுடலைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 8 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்த பெறுமதி 32லட்சம் ரூபாய் எனவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையில் 60 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா!பொலிஸ் சுற்றிவளைப்பால் மீட்ப்பு. Reviewed by Unknown on 6:10:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.