கள்ளக் காதலியை கழுத்தை நெறித்து கொன்ற இளைஞன்:தமிழகத்தில் பரபரப்பு!
செங்கோட்டை பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் வெள்ளத்தாய் என்ற பெண் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
கணவனை பிரிந்து 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்த வெள்ளத்தாய்க்கும், அப்பகுதியை சேர்ந்த முருகன் என்ற நபருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
முருகனுக்கு திருமணம் ஆகி குடும்பம் சிவகிரியில் இருந்துள்ளது. இந்நிலையில், ஊரில் உள்ள குடும்பத்திற்கு தெரியாமல் முருகன் வெள்ளத்தாயுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், முருகனுக்கு வெள்ளத்தாய் மீது சந்தேகம் ஏற்பட்ட இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று வெள்ளத்தாயின் மகன் பள்ளிக்கு சென்ற நேரம் பார்த்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த முருகன் வெள்ளத்தாயை மின் வயரால் கழுத்தைக் இறுக்கி கொன்று தப்பியோடியுள்ளார். வீடு திரும்பிய மகன் தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவலறிந்த சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார் வெள்ளத்தாய் உடலை மீடடு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாகியுள்ள குற்றவாளி முருகனை தீவரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக் காதலியை கழுத்தை நெறித்து கொன்ற இளைஞன்:தமிழகத்தில் பரபரப்பு!
Reviewed by Unknown
on
8:07:00 PM
Rating:
Reviewed by Unknown
on
8:07:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: