Top Ad unit 728 × 90

வவுனியா மட்டக்களப்பு மாவட்டங்களில் கடும் பனிப் பொழிவு! இது நீடிக்குமா..?

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று காலை வேளையில் மூடு பனி காணப்பட்டதினால் போக்குவரத்து செய்வதில் பாரிய பிரச்சினை காணப்பட்டது.

வீதி மற்றும் குடியிருப்புக்களில் காணப்பட்ட பனி மூட்டத்தினால் நுவரெலியா போன்று மட்டக்களப்பின் பல பகுதிகள் காட்சியளித்தன.

பனி மூட்டம் காரணமாக குடியிருப்புக்களில் காலை வேளையில் சுமார் 7.00 மணி கடந்தும் மின் விளக்குள் ஒளிர்ந்ததுடன் மக்களின் நடமாற்றங்களும் குறைவாகவே காணப்பட்டது.

மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதிகள் பனி மூட்டமாக காணப்பட்டதினால் போக்குவரத்து செய்யும் வாகனங்கள் காலை 7.00 மணி கடந்தும் வாகனத்தின் மின் ஒளியிலே போக்குவரத்து செய்வதை அவதானிக்க முடிந்தது.

கடந்த தினம் நாடா புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குளிருடன் கூடிய காற்று வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே போல வவுனியாவிலும் பல பகுதிகளில் கடும் பனிப் பொழிவு காணப்பட்டமை கறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு இது நீடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வவுனியா மட்டக்களப்பு மாவட்டங்களில் கடும் பனிப் பொழிவு! இது நீடிக்குமா..? Reviewed by Unknown on 8:34:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.