Top Ad unit 728 × 90

வெளியே சாப்ட்வேர் எஞ்சினியர். வீட்டில் சேலை கட்டும் கணவன். அதிர்ச்சியில் மனைவி

சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் நவீன் என்பவர் வீட்டில் இருக்கும் போது புடவை தான் கட்டிக்கொள்கிறார் என்றும் பல முறை அவரிடம் சொல்லியும் அவர் மாறவில்லை என்று அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அவரது துறையிலேயே பணிபுரியும் நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவருடைய கணவர் திருமணம் ஆன முதல் நாளில் இருந்தே பெண்ணை போல உடை அணிந்து கொள்கிறார் என்றும், ஆனால் வெளியில் செல்லும் போது பேண்ட், சட்டை அணிந்து கொண்டு செல்கிறார் என்றும் புகார் தெரிவித்துள்ளார். மேக்-அப் போட்டுக்கொண்டு, புடவை உடுத்திக்கொள்வதை தான் அவர் விரும்புகிறார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
திருமணமான நாளில் இருந்து இதுவரை இருவரும் செக்ஸில் ஈடுபட்டதில்லை என்றும் அதற்கு காரணமும் அவரது கணவர் பெண் போல் நடந்து கொள்வதால் என்றும் கூறியிருக்கிறார். அதனால் அவரது கணவரை விட்டு பிரிய விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர்களின் முதல் இரவு அன்று கூட நவீன் புடவை தான் அணிந்து கொண்டார் என்றும் அவரது மனைவி கூறியுள்ளார். இருவருக்கும் மன நல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெற்று வந்துள்ளனர். அதன் பின்பும் லெஸ்பியன் செக்ஸில் ஈடுபடவே அவரது கணவர் விரும்புவதாக நவீனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அதனால் கணவரை விட்டு பிரிய வேண்டும் என்று அப்பெண் கூறியுள்ளார். இதற்கு நவீனும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் முழு மனதுடன் பிரிந்ததாக கூறப்படுகிறது.
வெளியே சாப்ட்வேர் எஞ்சினியர். வீட்டில் சேலை கட்டும் கணவன். அதிர்ச்சியில் மனைவி Reviewed by Unknown on 7:00:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.