Top Ad unit 728 × 90

ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து தூக்க ஆளுநரிடம் மனு தாக்கம்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த கோரிக்கையை தொடர்ந்து முதல்வர் வகித்து வந்த இலாகாவை நிதி அமைச்சரான ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கி ஆளுநர் உத்தரவிட்டார்.
ஆனால், ஆளுநரின் இந்த உத்தரவிற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான எஸ். துரைசாமி என்பவர் ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாவை ஓ.பன்னீர் செல்வத்திற்கு மாற்றியது தவறு. முதல்வரின் இலாகாவை வேறொருவர் கவனிப்பது அரசியல் சட்டத்திற்கு புரம்பானது.
அமைச்சர்களையும் தலைமைச்செயலாளரையும் ஆளுநர் அழைத்து பேசியது சட்டவிரோதமானது.
முதல்வர் ஜெயலலிதா கையெழுத்து அல்லது வாய்மொழியாக இலாகாவை மாற்ற ஆளுநருக்கு அறிவுறுத்தவில்லை.
முதல்வரின் அறிவுறுத்தல் இன்றி அவரது இலாகாவை வேறு ஒருவருக்கு ஆளுநர் மாற்ற முடியாது.
எனவே ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மற்றொருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என எஸ். துரைசாமி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து தூக்க ஆளுநரிடம் மனு தாக்கம்! Reviewed by Unknown on 6:40:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.