யாழ் மற்றும் கொழும்பை தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் தமிழனுக்கு சூடு!
சுவிட்சர்லாந்தில் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள சிற்றுண்டி கடை அருகே ஏற்பட்ட கைகலப்பில் தமிழர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தின் அருகே செவ்வாய் அன்று இரவு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. 29 வயது மதிக்கத்தக்க அந்த நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்ற உடன் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மாகாண பொலிஸார் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து குறித்த நபரை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிசூடு சம்பவத்தின் பின்னணி காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஒன்று அல்லது இரண்டு பேர் அங்கிருந்து தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரயில் நிலையம் பரபரப்பான பகுதி என்பதால் சம்பவம் நடந்த போது இருந்த பொதுமக்களை பொலிஸார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தப்பியோடிய நபருக்கு 46 வயது இருக்கலாம் என்றும் அவரது பெயர் வசி எனவும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி குறித்த சம்பவத்தின் முன்னர் இலங்கை குடிமக்கள் சிலர் அப்பகுதியில் வைத்து கைகலப்பில் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபருக்கு 29 வயது இருக்கலாம் என்றும் அவரது பெயர் கார்த்தி எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தின் அருகே செவ்வாய் அன்று இரவு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. 29 வயது மதிக்கத்தக்க அந்த நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்ற உடன் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மாகாண பொலிஸார் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து குறித்த நபரை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிசூடு சம்பவத்தின் பின்னணி காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஒன்று அல்லது இரண்டு பேர் அங்கிருந்து தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரயில் நிலையம் பரபரப்பான பகுதி என்பதால் சம்பவம் நடந்த போது இருந்த பொதுமக்களை பொலிஸார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தப்பியோடிய நபருக்கு 46 வயது இருக்கலாம் என்றும் அவரது பெயர் வசி எனவும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி குறித்த சம்பவத்தின் முன்னர் இலங்கை குடிமக்கள் சிலர் அப்பகுதியில் வைத்து கைகலப்பில் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபருக்கு 29 வயது இருக்கலாம் என்றும் அவரது பெயர் கார்த்தி எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
யாழ் மற்றும் கொழும்பை தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் தமிழனுக்கு சூடு!
Reviewed by Unknown
on
6:40:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:40:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: