அசிரியரால் தாக்கப்பட்ட 2ம் தர மாணவர் வைத்தியசாலையில்! வவுனியாவில் பிரபல பாடசாலை சம்பவம்...
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள பிரபல்யமான தமிழ் பாடசாலையோன்றில் நேற்று (23.11.2016) ஆசிரியர் கூறியதை கேட்காமல் கோபமடைந்த ஆசிரியர் தரம் இரண்டு மாணவன் யோ.விஷர்ல் ஜ தாக்கியுள்ளதார் இதனால் காயமடைந்த மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக காயமடைந்த மாணவனின் தந்தை இவ்வாறு தெரிவித்தார்,
எனது மகன் மீது குறித்த ஆசிரியர் காலை 9.00மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் மகனின் காது பகுதியிலிருந்து இரத்தம் வெளியேறியுள்ளது. ஆனால் எனக்கு தெரிவிக்கையும் இல்லை மருத்துவமனையில் அனுமதிக்கவும் இல்லை மதியம் 12.00மணியளவில் பாடசாலைக்கு மகனை அழைத்துவர சென்ற போது தான் மகனின் காது பகுதியில் இரத்தம் வழிந்தமையினை அவதானித்து அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதித்ததாக தெரிவித்தார். மேலும் குறித்த ஆசிரியர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகனிக்கு அடித்து விட்டேன் தயவு செய்து பொலிஸில் முறைப்பாடுகள் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
அசிரியரால் தாக்கப்பட்ட 2ம் தர மாணவர் வைத்தியசாலையில்! வவுனியாவில் பிரபல பாடசாலை சம்பவம்...
Reviewed by Unknown
on
9:37:00 PM
Rating:
Reviewed by Unknown
on
9:37:00 PM
Rating:


கருத்துகள் இல்லை: