Top Ad unit 728 × 90

குழந்தைகளை தூங்க வைப்பதற்காக போதை ஊசி போட்ட பெற்றோர்:அமெரிக்காவில் சம்பவம்!

அமெரிக்காவில் மூன்று குழந்தைகளுக்கு போதை ஊசி செலுத்தி தூங்கவைத்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தைச் சேர்ந்தவர் Ashlee Hutt(24) இவரது கணவர் Leroy McIver (25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

அதில் பெண்குழந்தைகள் இருவருக்கு 2 வயது மற்றும் 4 வயதும், ஆண் குழந்தைக்கு 6 வயதும் ஆகியுள்ளது.இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளுக்கு போதை மருந்து ஊசி போட்டு தூங்க வைப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.இது குறித்து விசாரணை நடத்திய போது அவர்கள் குழந்தைகளுக்கு போதை ஊசி செலுத்தியுள்ளது உறுதியானது. இது குறித்து குழந்தைகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு 6 வயது குழந்தை அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்ததுள்ளது.

அக்குழந்தை கூறுகையில், இதை எங்கள் அம்மா, அப்பா இருவரும் தான் உடலில் செலுத்துவார்கள் என்றும், இது போட்டுக் கொண்டல் உடலுக்கு நல்லது என்றும். இது ஒரு வகை சத்து நிறைந்த ஊசி என கூறி செலுத்தியுள்ளனர்.

மேலும் நான்கு வயது குழந்தை கூறுகையில், ஒரு வெள்ளை நிற பவுடரை எடுத்துக் கொள்வார்கள் என்றும் அதை தண்ணீரில் கலக்கி விட்டு பின்னர் அதை தன்னுடைய உடம்பில் செலுத்துவார்கள் என்றும் அதன் பின்னர் தானாக உறங்க சென்று விடுவோம் என கூறியுள்ளார்.

இதில் நடத்திய விசாரணையில் இரு குழந்தைகளுக்கும் போதை மருந்து செலுத்தியது உறுதியாகியுள்ள நிலையில், 2 வயது குழந்தைக்கு மட்டும் போதை ஊசி செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது.இருப்பினும் பொலிசார் அக்குழந்தையின் முடியினை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை என்றும், தீவிர விசாரணைக்கு பின்னரே அது தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தைகளை தூங்க வைப்பதற்காக போதை ஊசி போட்ட பெற்றோர்:அமெரிக்காவில் சம்பவம்! Reviewed by Unknown on 2:58:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.