இலங்கை அணிக்கு இன்று கறுப்பு தினமாக அறிவிப்பு ஏன் தெரியுமா?
இலங்கை அணி ஜிம்பாவேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணி வீரர்கள் அனைவரும் தங்களுடைய டீசர்ட்டில் கறுப்பு நிற பேஜ் அணிந்து விளையாட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும் பாடகருமான அமரதேவா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 3 ஆம் திகதி காலமானார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இலங்கை வீரர்கள் அனைவரும் ஜிம்பாவே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கறுப்பு நிற பேஜ் அணிந்து விளையாட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அணிக்கு இன்று கறுப்பு தினமாக அறிவிப்பு ஏன் தெரியுமா?
Reviewed by Unknown
on
5:35:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:35:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: