Top Ad unit 728 × 90

கடல் சிங்கத்துக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்:கடித்து குதறிய பரிதாபம்!

ஸ்பெயினில் உள்ள நீர் விளையாட்டு பூங்காவில் கடல் சிங்கத்துக்கு முத்தம் கொடுக்க முற்பட்ட பெண்ணை சிங்கம் கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் உள்ள கிரான் கனேரியா பகுதியில் உள்ள நீர் விளையாட்டு பூங்காவிற்கு லீஎட்கார்(20) என்ற பெண் அவர் நண்பருடன் விடுமுறை பயணமாக சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தண்ணீர் தொட்டியில் இருந்த 8 அடி நீளமுள்ள ராக்கி என்ற கடல் சிஙகத்துடன் செல்பி எடுக்க முற்பட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல் அதன் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்றும் செல்பி எடுக்க முற்பட்டுள்ளர். அப்போது திடீரென கடல் சிங்கம் திரும்பி அப்பெண்ணின் இடது தொடையை வெறியுடன் கடித்துள்ளது.

இதிலிருந்து மீள முற்பட்டும் அப்பெண்ணால் மீள முடியவில்லை. அங்கிருந்த பணியாளர்கள் சிலர் வந்த பின்னரே அவர் கடல் சிங்கத்திடம் இருந்து மீட்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் வேகமாக அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில், ராக்கி (கடல் சிங்கம்) யிடம் செல்பி எடுக்க முற்பட்ட போது அது தன்னுடைய முகத்தை கடிக்க வந்ததாகவும் அதன் பின்னர் தான் அதை தள்ளிவிட்டவுடன் தன்னுடைய தொடையை கடித்துவிட்டதாகவும், தொடர்ந்து 5 வினாடிகள் வரை அதுடன் தான் போராடியதாகவும் அதன் பின்னர் கவுண்டரில் டிக்கெட் கொடுத்தவர்கள் வந்த பின்னரே தான் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
கடல் சிங்கத்துக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்:கடித்து குதறிய பரிதாபம்! Reviewed by Unknown on 5:40:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.