Top Ad unit 728 × 90

வானிலை ஆய்வு மையத்தை உடைத்தெறிந்த வர்தா புயல்!

சென்னை வானிலை ஆய்வு மைய கண்ணாடிகள் தற்போது வர்தா புயலினால் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சென்னையில் இருந்து 50 கி.மீ., மையம் கொண்டுள்ள அதிதீவிர வர்தா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்க துவங்கியுள்ளது.

இதனால் அங்கு 120 கி.மீ., முதல் 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசுகிறது. இது அவ்வப்போது 140 கி.மீ., வேகத்தை எட்டியுள்ளது.

இந்த பலத்த காற்றால் சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இதனது நேரடி தாக்கம் நாட்டினுள் ஏற்படாவிடினும், மன்னார் வளைகுடா மற்றும் காங்கேசன்துறை கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தை உடைத்தெறிந்த வர்தா புயல்! Reviewed by Unknown on 6:03:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.