Top Ad unit 728 × 90

மட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கடல் நீர் !

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா கடல் நீர் உட்புகுந்த நாவலடி பகுதியை இன்று(12) காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் கருத்துக் கூறுகையில், குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் இப்பகுதியில் கடல் நீர் உட்புகுந்ததால் அச்சத்தின் காரணமாக கரையை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்புக்காக தங்களது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இந்த கடல் நீர் உட்புகுந்ததால் எதுவித இழப்புகளோ பாதிப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதே வேளை உறவினர்களின் வீடுகளுக்கு சென்றவர்கள் இன்றைய தினம் முற்பகல் தொடக்கம் தமது வீடுகளுக்கு திரும்பி வருவதுடன் கடந்த சனிக்கிழமை இரவு கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளிலும் கடல் நீர் நிலப் பகுதிகளுக்குள் புகுந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கடல் நீர் ! Reviewed by Unknown on 5:56:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.