Top Ad unit 728 × 90

நியூஸிலாந்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உருவான அதிசயம்!

நியூஸிலாந்தில் நில நடுக்கம் ஏற்பட்டமையினால் அங்கு பாரிய சுவர் ஒன்று இயற்கையாக தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நியூஸிலாந்து, க்ரைச்சேர்ச்சில் இருந்து 600 மைல்கள் தூரத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்த நில நடுக்கத்தின் பின்னர் 15 அடிக்கு உயர்மான இயற்கை சுவர் ஒன்று நியூசிலாந்து கிராமப்புறங்களில் உருவாகியுள்ளது.

7.8 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நில நடுகத்தினால் பூமி இரண்டாக பிளவடைந்து சுவர் ஒன்று தோன்றியுள்ளதனை விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சுவர் 15 அடி உயரமானதென Canterbury பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியூஸிலாந்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உருவான அதிசயம்! Reviewed by Unknown on 5:26:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.