Top Ad unit 728 × 90

தமிழகத்தின் முதல்வராக சசிகலா! இலங்கை ஜனாதிபதிக்கு உறுதிக் கடிதம்!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-வுக்கு சசிகலா கடிதம் எழுதியிருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்திய அமைச்சர் திரு.பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி.சசிகலா ஆகியோர் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் அதிக மீனவர்கள் பங்குகொள்ள அனுமதி அளிக்குமாறு கோரி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன-வுக்கு கடிதம் எழுதியிருந்த சம்பவம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான், இந்திய அமைச்சர் திரு.பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் சசிகலாவிற்கும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், உங்கள் கோரிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவின்படி, ஏற்கனவே 20 தமிழக மீனவர்களை அனுமதிக்க முடிவெடுத்திருந்த நிலையில், இப்போது 100 தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறி இருவருக்கும் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
எந்தவொரு அரசாங்க பொறுப்பிலும் இல்லாத சசிகலா இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சம்பவம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக சசிகலா! இலங்கை ஜனாதிபதிக்கு உறுதிக் கடிதம்! Reviewed by Unknown on 5:36:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.