Top Ad unit 728 × 90

ஜெயா திட்டமிட்டு படுகொலை...! இன்று ஆதாரம் வெளியாகும்..! தமிழகத்தில் பெரும் பரபரப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஐந்தாம் திகதி உயிரிழந்தார்.

அவரின் மரணம் தொடர்பில் இன்று வரையிலும், பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு பாரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கொலை செய்யப்படுவார் என 40 பக்கங்கள் அடங்கிய மனு ஒன்றை கடந்த 2014ஆம் ஆண்டிலேயே தமிழக பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த 40 பக்கங்களை கொண்ட ஆதாரங்களை இன்று செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட போவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பிற்கான அழைப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதேவேளை, அதிமுக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. இதன்போது சசிக்கலா அந்த அமைப்பின் பொது செயலாளராக தெரிவு செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜெயலலிதா கொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரத்தை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளமை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜெயா திட்டமிட்டு படுகொலை...! இன்று ஆதாரம் வெளியாகும்..! தமிழகத்தில் பெரும் பரபரப்பு Reviewed by Unknown on 5:37:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.