Top Ad unit 728 × 90

திருமணம் முடிந்த பெண்ணை அடைவதற்காக..! இவர் செய்த வேலை தெரியமா?

டெல்லியில் திருமணம் முடிந்த பெண்ணை அடைவதற்காக அவரது கணவருக்கு மருத்துவர் ஒருவர் விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு டெல்லியில் உள்ள சர்தார் பசார் என்ற பகுதியில் ரவி(28) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள அருகிலுள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இதைத் தொடர்ந்து ரவி தனது பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அப்பகுதி வழியே வந்த மர்ம நபர் ஒருவர் அவர் மீது ஊசி ஒன்றை செலுத்தி விட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இதனால் வலி தாங்காமல் துடிதுடித்த அவரைக்கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் அங்கு சென்ற ஒரு மணி நேரத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின்னர் மருத்துவர்கள் அவரது உடலை ஆராய்ந்து பார்த்த போது,24 மணி நேரத்தில் உயிரை பறிக்கும் விஷம் அவருக்கு ஊசி மூலம் அந்த மர்ம நபர் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில்,ரவிக்கு விஷம் செலுத்திய அந்த நபர் ஒரு பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் என்றும் ரவியின் மனைவியை அடைய நினைத்த அந்த நபர், தனது ஆசைக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி ரவியை கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
திருமணம் முடிந்த பெண்ணை அடைவதற்காக..! இவர் செய்த வேலை தெரியமா? Reviewed by Unknown on 5:48:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.