Top Ad unit 728 × 90

சாப்பிடும் போது பேசக்கூடாது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

அதே போல் அவர்கள் கூறும், சாப்பிடும் போது பேசக் கூடாது என்பதற்கு சாதரண சில காரணங்கள் இருந்தாலும், விஞ்ஞானத்தில் அதற்கான அர்த்தங்கள் உள்ளது.
சாப்பிடும் போது ஏன் பேசக் கூடாது?

நமது வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல மூக்கிலிருந்து சுவாசக்குழாயும், தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது.

நாம் சாப்பிடும் போது, நம்முடைய சுவாசப்பாதை மூடிக் கொள்ளும், உணவு அதை கடந்து போனதும் மீண்டும் திறந்து கொள்ளும் இது ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகிறது.

மேலும் இந்த சுழற்சியில், கதவு போன்ற அமைப்பு நமது உணவுக்குழாய்க்குள் காற்றோ, சுவாசக்குழாய்க்குள் உணவோ போய்விடாமல் தடுக்கப்படுகிறது.

இந்த சுழற்சி நேரங்களில், நாம் பேசிக் கொண்டே சாப்பிடும் போது, சுவாசக்குழாய் திறக்கும்.

இப்படி திறக்கும் போது சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்துவிடுவதால், அந்த உணவை வெளியே தள்ளுவதற்கு நமது சுவாசக்குழாய் வேகமான ஒரு விசையை ஏற்படுத்து. அதற்கு தான் புரையேறுதல் என்கிறார்கள்.

எனவே நமது சுவாசக் குழாய்க்கும், உணவுக் குழாய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதால், தான் புரையேறுதல் ஏற்படும் இது சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதால், சாப்பிடும் போது பேசக் கூடாது என்று கூறுகிறார்கள். 
நமது முன்னோர்கள் கூறும் ஒவ்வொரு செயலுக்கும் விஞ்ஞான பூர்வமாக சில அர்த்தங்கள் இருக்கும்.
சாப்பிடும் போது பேசக்கூடாது ஏன்? உங்களுக்கு தெரியுமா? Reviewed by Unknown on 5:59:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.