Top Ad unit 728 × 90

கணவரை கொன்றது எப்படி? கள்ளக்காதலால் வந்த வினை- இளம்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை மேடவாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 25), இவர் பிரபல வணிக வளாகம் ஒன்றில் எலக்ட்ரிக்கல் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மிக கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவதினத்தன்று இரவு 11.30 மணியளவில் மர்ம கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்ததாகவும், அறிவழகனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டதாகவும் பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

தடுக்க சென்ற அறிவழகனின் மனைவி சுரோகாவுக்கும் கத்தி குத்து விழுந்தது, இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர், அதற்கு சுரேகா, புத்தாண்டு தினத்தன்று சிலர் எனது வீட்டருகில் மது அருந்திக் கொண்டிருந்தனர், இதனை என் கணவர் தட்டிக்கேட்டார். உடனே கோபமடைந்தவர்கள் என் கணவரை குத்தி விட்டு தப்பியோடி விட்டனர் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு யாரும் வந்து சென்றதாக தெரியவில்லை என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர், எனவே சுரேகாவிடம் மீண்டும் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போது அவர், அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவரை காதலித்து வந்ததும், கள்ளக்காதலன் உடன் சேர்ந்த அறிவழகனை தீர்த்துக் கட்டியதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர், சுரேகா அளித்துள்ள வாக்குமூலத்தில், கணபதியுடன் தொடர்பு ஏற்பட்டவுடன் அறிவழகனுடன் வாழப்பிடிக்கவில்லை.

அடிக்கடி சந்தேகப்பட்டார், இதுபற்றி கணபதியிடம் கூறியதும் கணவரை கொன்றுவிட்டு சந்தோஷமாக வாழலாம் என கூறினார்.

இதன்படி மது அருந்திய வாலிபர்கள் மீது பழியை போட்டுவிடலாம் என திட்டம் தீட்டினோம், அன்றிரவு 11.30 மணியளவில் கணபதி என் வீட்டுக்கு வந்தார்.

ஆழந்த உறக்கத்தில் இருந்த என் கணவரை தலையணையால் அமுக்கினோம், சத்தம் போட்டுவிடுவார் என்ற பயத்தில் கத்தியால் குத்தினோம்.

பின்னர் சடலத்தை வெளியே தூக்கி வீசியதுடன், மது குடித்தவர்களே கொலை செய்துவிட்டதாக தெரியவேண்டும் என்பதற்காக காலி மதுபாட்டில்களை சடலத்திற்கு அருகில் வீசினோம்.

அடுத்து கணபதி தப்பிச்சென்றுவிட்டார், நான் சமையலை சென்று கத்தியால் என் கையை வெட்டிக் கொண்டோம், இதனால் பொலிசுக்கு சந்தேகம் வராது என நம்பினோம், கடைசியில் மாட்டிக் கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
கணவரை கொன்றது எப்படி? கள்ளக்காதலால் வந்த வினை- இளம்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம் Reviewed by Unknown on 6:16:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.