Top Ad unit 728 × 90

தோழியை கற்பழித்து கொல்ல திட்டமிட்ட பள்ளி மாணவர்கள்: நிகழ்ந்த அதிரடி திருப்பம்

கனடா நாட்டில் உடன் படித்த தோழியை கற்பழித்து கொலை செய்ய திட்டமிட்ட இரண்டு பள்ளி மாணவர்கள் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தில் உள்ள St-Hyacinthe என்ற நகரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தான் இந்த சதி திட்டத்தை தீட்டியுள்ளனர்.

இதே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களுடன் படிக்கும் தோழி ஒருவரை கற்பழித்து கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், மற்ற 3 மாணவர்களையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த சதி திட்டம் தொடர்பாக இரண்டு மாணவர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தகவல்களை பரிமாறியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த தகவலை சதி திட்டம் தீட்டிய மாணவர்களில் ஒருவனது பெற்றோர் கண்டுபிடித்து துணிச்சலாக பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

பெற்றோரின் புகாரை பெற்ற பொலிசார் உடனடியாக மாணவர்கள் செல்லும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

பள்ளியில் இரண்டு மாணவர்களின் லாக்கரை சோதனை செய்தபோது அதில் கூர்மையான கத்தி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

கொலை செய்யும் திட்டத்திற்காக இருவரும் கத்தியை அங்கு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரின் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோழியை கற்பழித்து கொல்ல திட்டமிட்ட பள்ளி மாணவர்கள்: நிகழ்ந்த அதிரடி திருப்பம் Reviewed by Unknown on 6:07:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.