Top Ad unit 728 × 90

தன் மகளை கற்பழித்தவனுக்கு தந்தை கொடுத்த அதிரடி தண்டனை!

இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளை கற்பழித்தவனுக்கு அதிரடி தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பர்மிந்தர் சிங் என்பவரின் 17 வயது மகள் ஒரு மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து குற்றவாளி அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பர்மிந்தர் சிங்கிடம் வீடு வாங்கி தருகிறேன் வழக்கு சமரசம் செய்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். பின்னர், வீட்டை நேரில் காண்பிக்க பர்மிந்தர் சிங்கை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், வாகனத்தை பாதியிலே நிறுத்தி பர்மிந்தர் குற்றவாளியை மரத்தில் கட்டி வைத்து கையை கத்தியால் வெட்டி தப்பிச்சென்றுள்ளார்.

தற்போது, கற்பழிப்பு குற்றவாளி கையை இழந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான பர்மிந்தர் சிங்கை பொலிசார் தேடி வருகின்றனர்.
தன் மகளை கற்பழித்தவனுக்கு தந்தை கொடுத்த அதிரடி தண்டனை! Reviewed by Unknown on 5:55:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.