Top Ad unit 728 × 90

பிரான்ஸ் பொலிஸார் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்!

பொலிஸார் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிரன்சுவா ஹொல்லாண்டே தனது கண்டனங்களை வெளிட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பொலிஸ் படைகள் மீது டஜின் கணக்கானவர்கள் பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல்களை மேற்கொண்டனர். குறித்த சம்பவத்தில் 4 அதிகாரிகள் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவத்தினை ‘சொற்களால் விளக்கமுடியாத மற்றும் பொறுத்துக்கொள்ள முடியாத செயல்’ என்று விழித்துள்ள ஜனாதிபதி, ‘இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் தேடிக்கண்டுபிடித்து அவர்களின் செலிற்குத் தக்க தண்டனையினை பெற்றுக்கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாக்குதலில் 15 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், வீதி சமிக்ஞையுடன் பொறுத்தப்பட்ட கமராக்கள் மூலம் அவர்களை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பொலிஸார் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்! Reviewed by Unknown on 7:07:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.