கணவன் கண்முனாடியே மனைவி கதறக் கதற வன்புணர்வு!
மும்பை(02 நவ 2016): கணவன் கண்முன் மனைவி 8 பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ,மும்பை ஜோகேஷ்வரியில் நடந்துள்ளது.
மும்பை ஜோகேஷ்வரி கிழக்கு, அம்போலியில் குடிசை பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கணவர், மாமனார், மாமியார் மற்றும் 2 இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். அவர் தங்குவதற்கு வீடு வாடைக்காக தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் கணவன், மனைவி இருவரும் மும்பை ஷாம் நகர் குடிசை பகுதியில் வீட்டு தரகரான மூதாட்டி ஒருவர் உதவியுடன் வாடகை வீடு தேடினர். இரவு வெகுநேரமாகி விட்டதால் மூதாட்டி இருவரையும் அங்கு காலியாக இருக்கும் தனது வீட்டில் தங்கி கொள்ளும்படி கூறினார். இதையடுத்து தம்பதி இருவரும் அந்த வீட்டில் படுத்து தூங்கினர். இதை கவனித்து கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த 8 வாலிபர்கள், அனைவரும் தூங்கிய பின்னர் அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அந்த வாலிபர்கள் இளம்பெண்ணின் கணவரை அடித்து உதைத்து கை, கால்களை கட்டி போட்டனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை மாறி, மாறி வன்புணர்ந்துள்ளனர். பின்பு அந்த வாலிபர்கள் தப்பியோடிவிட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்த அம்போலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடைய 7 வாலிபர்களை அதிகாலை 5 மணியளவில் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான எட்டாவது வாலிபர் நேற்று காலை 11 மணிக்கு கைது செய்தனர்.
பின்பு இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மும்பை ஜோகேஷ்வரி கிழக்கு, அம்போலியில் குடிசை பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கணவர், மாமனார், மாமியார் மற்றும் 2 இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். அவர் தங்குவதற்கு வீடு வாடைக்காக தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் கணவன், மனைவி இருவரும் மும்பை ஷாம் நகர் குடிசை பகுதியில் வீட்டு தரகரான மூதாட்டி ஒருவர் உதவியுடன் வாடகை வீடு தேடினர். இரவு வெகுநேரமாகி விட்டதால் மூதாட்டி இருவரையும் அங்கு காலியாக இருக்கும் தனது வீட்டில் தங்கி கொள்ளும்படி கூறினார். இதையடுத்து தம்பதி இருவரும் அந்த வீட்டில் படுத்து தூங்கினர். இதை கவனித்து கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த 8 வாலிபர்கள், அனைவரும் தூங்கிய பின்னர் அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அந்த வாலிபர்கள் இளம்பெண்ணின் கணவரை அடித்து உதைத்து கை, கால்களை கட்டி போட்டனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை மாறி, மாறி வன்புணர்ந்துள்ளனர். பின்பு அந்த வாலிபர்கள் தப்பியோடிவிட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்த அம்போலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடைய 7 வாலிபர்களை அதிகாலை 5 மணியளவில் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான எட்டாவது வாலிபர் நேற்று காலை 11 மணிக்கு கைது செய்தனர்.
பின்பு இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கணவன் கண்முனாடியே மனைவி கதறக் கதற வன்புணர்வு!
Reviewed by Unknown
on
2:10:00 AM
Rating:
Reviewed by Unknown
on
2:10:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: