Top Ad unit 728 × 90

வவுனிய-பூந்தோட்டத்தில் உள்ள மது கடையால் பரபரப்பு!மூடச் சொல்லி மக்கள் கொந்தளிப்பு..?

வவுனியா பூந்தோட்டத்தில் இன்று (20.11.2016) சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபான சாலையை மூடுமாறு கோரியும் கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் மதுபான சாலைகளை மூடுமாறு கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
கடந்த தீபாவளி தினத்தில் சிலர் மது போதையில் பூந்தோட்டம் பகுதியில் கைகலப்பில் ஈடுபட்டதுடன் இரண்டு சமூகங்களுக்கு இடையிரான  பிரச்சனையாக உருவெடுத்திருந்த நிலையில் அதன் எதிரோலியாக பூந்தோட்ட மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும்


இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள்-
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலைக்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு கிரமங்களில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்படுகிறது. இது மக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது வவுனியா பூந்தோட்டத்தில் மாத்திரமல்ல வவுனியாவில் கிராமப் புறங்களில் மதுபான சாலைகள் அதிகரித்து வருகிறது ஆகவே கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும்.
மதுபான சாலைகள் சில நேரங்களில் இன ஐக்கியத்திற்கும் இடையூறாக செயல்ப்படுவதினால் அவைகள் மூடப்பட வேண்டும் அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட மதுபானசாலையை அகற்றுவதற்காக கிராம மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்படும் அது ஜனாதிபதி மட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

வவுனிய-பூந்தோட்டத்தில் உள்ள மது கடையால் பரபரப்பு!மூடச் சொல்லி மக்கள் கொந்தளிப்பு..? Reviewed by Unknown on 6:16:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.