உயிரை காத்த ராணுவ வீரர்களின் மனைவிகள்:ஜம்மு காஷ்மீரில் துணிகர சம்பவம!
ஜம்மு காஷ்மீர் அருகில் உள்ள நக்ரோட்டாவில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
முகாமில் பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளனரா என ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவ முகாமில் வீரர்கள் குடியிருப்பில் தங்களது கணவருடன் பச்சிளம் குழந்தைகளுடன் வசித்து வரும் பணிபுரியும் இரண்டு ராணுவ வீரர்களின் மனைவிகள், பயங்கரவாதிகள் தாக்கியபோது, துணிச்சலாக, வீட்டில் வைத்திருந்த பொருட்களை கொண்டு தடுப்பு அமைத்திருந்தனர்.
இதனால், பயங்கரவாதிகள் உள்ளே நுழைய முடியவில்லை. இதன் மூலம் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ராணுவ வீரர் ஒருவர் கூறியதாவது, இரவுப்பணியில் இருந்த இரண்டு வீரர்களின் மனைவிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியதை தெரிந்ததும், துணிச்சலாகவும், சாமர்த்தியமாகவும், தங்கள் வீட்டில் வைத்திருந்த பொருட்களை வைத்து அந்த குடியிருப்பிற்குள் பயங்கரவாதிகள் உள்ளே நுழைய முடியாதவாறு, தடுப்புகளை அமைத்தனர்.
இந்த தடுப்பை பயங்கரவாதிகளால் தகர்க்க முடியவில்லை. பெண்கள் மட்டும் துணிச்சலாக செயல்படாமல் இருந்திருந்தால், பயங்கரவாதிகள் அங்கு நுழைந்து பலரை பிணைக்கைதிகளாக வைத்திருப்பர்.
அவர்கள், ராணுவத்திற்கும், குடும்பத்திற்கும் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் எனக்கூறியுள்ளார்.
இதில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
முகாமில் பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளனரா என ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவ முகாமில் வீரர்கள் குடியிருப்பில் தங்களது கணவருடன் பச்சிளம் குழந்தைகளுடன் வசித்து வரும் பணிபுரியும் இரண்டு ராணுவ வீரர்களின் மனைவிகள், பயங்கரவாதிகள் தாக்கியபோது, துணிச்சலாக, வீட்டில் வைத்திருந்த பொருட்களை கொண்டு தடுப்பு அமைத்திருந்தனர்.
இதனால், பயங்கரவாதிகள் உள்ளே நுழைய முடியவில்லை. இதன் மூலம் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ராணுவ வீரர் ஒருவர் கூறியதாவது, இரவுப்பணியில் இருந்த இரண்டு வீரர்களின் மனைவிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியதை தெரிந்ததும், துணிச்சலாகவும், சாமர்த்தியமாகவும், தங்கள் வீட்டில் வைத்திருந்த பொருட்களை வைத்து அந்த குடியிருப்பிற்குள் பயங்கரவாதிகள் உள்ளே நுழைய முடியாதவாறு, தடுப்புகளை அமைத்தனர்.
இந்த தடுப்பை பயங்கரவாதிகளால் தகர்க்க முடியவில்லை. பெண்கள் மட்டும் துணிச்சலாக செயல்படாமல் இருந்திருந்தால், பயங்கரவாதிகள் அங்கு நுழைந்து பலரை பிணைக்கைதிகளாக வைத்திருப்பர்.
அவர்கள், ராணுவத்திற்கும், குடும்பத்திற்கும் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் எனக்கூறியுள்ளார்.
உயிரை காத்த ராணுவ வீரர்களின் மனைவிகள்:ஜம்மு காஷ்மீரில் துணிகர சம்பவம!
Reviewed by Unknown
on
5:09:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJkVj5Pc5T0UyTvvOyi3YljI7-NR1XY4bE9zHPRKFyL2YrLXsRq2g4CIMD07c0ft0ErOom6470RChtw8oy6attdUfvSM-LLaistwsrCkbHO-DDS_PgCVqPsn6yVD_-ef5kSguksVzOMgXl/s72-c/ice_screenshot_20161201-063655.png)
கருத்துகள் இல்லை: