Top Ad unit 728 × 90

சூறாவளி தாக்கி சங்கத்தானை இளைஞன் அந்த இடத்திலே பலி! (படங்கள் இணைப்பு)

யாழ். குடாநாட்டில் இன்று (01) அதிகாலை முதல் சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையுடனான காலநிலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் திடீரென்று சரிந்து விழும் நிலையும் தொடர்கின்றது.

குறித்த நிலையில், யாழ்.சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் வீதியால் சென்றவர் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த இளைஞன் சங்கத்தானை பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் கஜந்தன் (வயது31) என கூறப்படுகின்றது.

மேலும், புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் 30 கிலோ மீற்றர் தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகம் வரையில் காணப்படும் எனவும், தற்போது வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சூறாவளி தாக்கி சங்கத்தானை இளைஞன் அந்த இடத்திலே பலி! (படங்கள் இணைப்பு) Reviewed by Unknown on 4:19:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.