Top Ad unit 728 × 90

சசிகலாவுக்கு ஜனவரியில் ஆப்பு ..! செக் வைத்து பேசிய சுப்பிரமணிய சுவாமி!

அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவின் அரசியல் வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்காது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது தோழியான சசிகலா அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது அவர்களின் உள்கட்சி விவகாரம்.

இருப்பினும் அவர் அரசியலில் நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது. சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்த மாதம் இறுதி தீர்ப்பு வெளியாகும்.

இந்த நிலையில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்தால் அவருடைய அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்துபோகும் என்று கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு ஜனவரியில் ஆப்பு ..! செக் வைத்து பேசிய சுப்பிரமணிய சுவாமி! Reviewed by Unknown on 5:51:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.