Top Ad unit 728 × 90

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை காலில் விழ வைத்த சசிகலா..!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச் செயலாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக இன்று சசிகலா நடராஜன் பதவியேற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் கட்சியினரிடையே ஏற்புரை நிகழ்த்திவிட்டு மேடையில் அவர் இருந்து கீழே இறங்கினார்.

அப்போது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் திடீரென சசிகலாவின் காலில் விழ முயற்சித்தனர்.

உடனே அவர்களை தடுத்து நிறுத்திய சசிகலா அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் தொண்டர்களை பார்த்து கையசைத்த படி அலுவலகத்தில் இருந்து போயஸ் தோட்டம் புறப்பட்டார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை காலில் விழ வைத்த சசிகலா..! Reviewed by Unknown on 6:02:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.