Top Ad unit 728 × 90

திருமண செய்வதாக கூறி நர்சை காதலித்து ஏமாற்றிய மாணவர்: அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் திருமண செய்து கொள்வதாக கூறி, காதலித்து நர்சை ஏமாற்றிய மாணவனின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியதஷனி (27). இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவியலராக பணியாற்றி வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(22), இவர் தனியார் கல்லூரிய படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடவில் காதலாக மாறியுள்ளது.

மணிகண்டன், பிரியதர்ஷனியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அவருடன் உறவு வைத்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் மணிகண்டனோ அவரிட ஆசை வார்த்தைகள் கூறி அவருடைய கருவை கலைத்துள்ளார்.

ஆனால், மணிகண்டன் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் மீது பிரியதர்ஷினி அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

புகாரை அடுத்து மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை , ஏமாற்றுதல், கருகலைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமண செய்வதாக கூறி நர்சை காதலித்து ஏமாற்றிய மாணவர்: அதிர்ச்சி சம்பவம்! Reviewed by Unknown on 5:54:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.