Top Ad unit 728 × 90

காதலித்து திருமணம் செய்ததால் மகள் கௌரவ கொலை! துடிதுடிக்க உயிர் போன பரிதாபம்

பாகிஸ்தானில் மகளை கௌரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் பீபி, இவரது மகள் ஜீனத்.

ஜீனத், அதே பகுதியை சேர்ந்த ஹசன்கான் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் கடந்தாண்டு இவருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.

தனியாக வீடு எடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், பர்வீன் பீபி மற்றும் சகோதரர் அனீஸ், ஜீனத்தை சந்தித்து இருவரையும் ஏற்றுக் கொள்வதாகவும், திருமண வரவேற்பிற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அழைத்துள்ளனர்.

இதனை நம்பி தாய் மற்றும் சகோதரருடன் சென்ற ஜீனத்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஒருகட்டத்தில் ஜீனத் மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்து உயிருடன் கொளுத்தியுள்ளனர்.

இதில் ஜீனத் பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பர்வீன் பீபி மற்றும் அனீஸை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி பர்வீன் பீபிக்கு மரண தண்டனையும், அனீசுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.


காதலித்து திருமணம் செய்ததால் மகள் கௌரவ கொலை! துடிதுடிக்க உயிர் போன பரிதாபம் Reviewed by Unknown on 6:25:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.