Top Ad unit 728 × 90

துப்பாக்கி முனையில் கற்பழிக்க முயன்றவர்: பொதுமக்களிடம் சிக்கியக்கினார்!

டெல்லியின் வட பகுதியில் அமைந்துள்ள குர்கானில் ஓடும் வாகனத்தில் துப்பாக்கி முனையில் பெண்கள் இருவரை பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குர்கானில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குறிப்பிட்ட பெண்கள் இருவரும் தங்களது பணி முடித்து அதிகாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

டெல்லியின் தக்‌ஷின்புரி பகுதியில் வைத்து வாடகை டாக்ஸி ஒன்றை அமர்த்திக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

வாகனம் சென்று கொண்டிருந்த பாதி வழியில் ஓட்டுனருக்கு பரிச்சயமான நண்பர் ஒருவரை அவர் வாகனத்தில் ஏற அனுமதித்துள்ளார்.

ஆள் ஆரவாரமற்ற பகுதிக்கு வந்ததும் திடீரென்று வாகனத்தை நிறுத்திய அந்த ஓட்டுனர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை உருவி பெண்கள் இருவர் முன்னும் நீட்டியுள்ளார்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையிட முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே ஓட்டுனரின் நண்பர் இதில் ஒரு பென்ணை திடீரென்று தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைக் கண்ட அவரது தோழி தன்னால் இயன்ற மட்டும் அந்த நபரை எட்டி உதைத்து தாக்கியுள்ளார்.

இதில் அந்த நபர் தெறித்து சாலையில் சென்று விழுந்துள்ளார். இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்து வெளியேறிய பெண்கள் கூச்சல் இடவே அக்கம்பக்கத்தில் இருந்த சிலர் அப்பகுதியில் கூடியுள்ளனர்.

பொதுமக்கள் கூடுவதை அறிந்த வாகன ஓட்டுனர் அங்கிருந்து தப்பியுள்ளார். ஆனால் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் ஒன்றாக சுற்றி வளைத்து பிடிகூடினர்.

அந்த நபரை பின்னர் பொலிஸிடம் ஒப்படைத்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வாகன ஓட்டுனரையும் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கி முனையில் கற்பழிக்க முயன்றவர்: பொதுமக்களிடம் சிக்கியக்கினார்! Reviewed by Unknown on 6:26:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.