Top Ad unit 728 × 90

35 வருடங்களாக ஆள் நடமாட்டமே இல்லாத நகரத்தை பாத்திருகிங்களா.?உள்ளே பார்கலாம்!

இத்தாலி நாட்டில் கடந்த 35 ஆண்டுகளாக பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நகரம் ஒன்று.

இத்தாலியின் பெனவென்றோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் தான் பொதுமக்களால் கைவிடப்பட்டு பேய்வீடு போன்று காட்சி அளிக்கிறது.

கடந்த 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த Irpinia நிலநடுக்கத்தை அடுத்து இங்கு குடியிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிர் பிழைப்பதற்காக இந்த நகரை மொத்தமாக காலி செய்துவிட்டு சென்றனர்.

அதன் பின்னர் இதுவரை 35 வருடங்கள் ஆகியும் அவர்கள் இங்கு குடியிருக்க வந்ததில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த நகரம் சிறுகச் சிறுக பொதுமக்களால் உயிர் பெற்று வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சுற்றுலாவுக்கு பெயர் போன இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கிட்டதட்ட 2,500 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்தன. மீண்டும் வந்து குடியிருக்கும் எண்ணம் அங்குள்ள குடிமக்களுக்கு வராததற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது பீதியே என்று கூறப்படுகிறது.

இங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம், இதனால் தங்களின் வாழ்வாதாரம் மொத்தமும் சீர்குழையலாம்என்ற அச்ச உணர்வே இதுவரை இந்த நகரில் மக்கள் குடியேற மறுத்து வந்ததன் காரணமாக கருதப்படுகிறது.
35 வருடங்களாக ஆள் நடமாட்டமே இல்லாத நகரத்தை பாத்திருகிங்களா.?உள்ளே பார்கலாம்! Reviewed by Unknown on 4:02:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.