Top Ad unit 728 × 90

இரண்டு இளம் முஸ்லீம் பெண்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தித்தி பிரித்தானிய நபர்!-பிரித்தானியா

பிரித்தானியாவில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு இளம் முஸ்லீம் பெண்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மான்செஸ்டர் நகரிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

குறித்த வீடியோவில், டிராம்பில் பயணிக்கும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தலையில் முக்காடு அணிதிருந்த இரண்டு முஸ்லீம் பெண்களை மீது இனவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

நான் உங்களை தீ வைத்து எரித்து விடுவேன். இந்த நகரத்தில் இனி அகதிகளுக்கு இடமில்லை என கூறி தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.

டிராமில் பயணித்த பாகிஸ்தானியர் ஒருவர் குறித்த வெள்ளை நபரை எதிர்த்துள்ளார். மேலும், குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குறித்த குற்றத்தில் ஈடுபட்ட தாடியுடன் இருக்கும் வெள்ளை இனத்தவரை தேடி வருகின்றனர்.

இரண்டு இளம் முஸ்லீம் பெண்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தித்தி பிரித்தானிய நபர்!-பிரித்தானியா Reviewed by Unknown on 7:39:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.